search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை"

    சத்தியமங்கலம் அருகே உடல் நலம் சரியில்லாததால் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் அருகே உடல் நலம் சரியில்லாததால் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்.  இவரது மனைவி கருணையம்மாள் (65). கடந்த ஒரு வருடமாக கருணையம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவ்வபோது வாழ்வதைவிட செத்துவிடலாம் என்று கூறி வந்துள்ளார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கருணையம்மாள் மகன் கடைக்கு சென்ற வீட்டுக்கு வந்தார். அப்போது கருணையம்மாள் வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மகன் விசாரித்தபோது தான் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்து விட்டதாக கூறினார். 

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் உடனடியாக இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் கருணையம்மாளை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுமதித்தனர்.

     பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கருணையம்மாள் இறந்தார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்று பகுதியில் சுமார் 60 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த  திம்மராயசமுத்திர கிராம நிர்வாக அலுவலர் அனுபிரியா அவரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். 

    இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில், இறந்தவர் மதுரையை சேர்ந்த ராமசாமி மனைவி காமாட்சி (வயது 60) என்பதும், விஷம் குடித்து விட்டு மயங்கி  கிடந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி திருச்சிக்கு வந்தார்? இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×